ADDED : அக் 12, 2015 11:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* துன்பப்படும் நேரத்தில், மனதை தைரியம் என்னும் சாதனத்தால் நிலை நிறுத்துவதே சரியான யோகப்பயிற்சி.
* இயற்கையை மதித்து வாழ்ந்தால் எந்த தீமையும் உண்டாகாது. இது சாதாரண விஷயமல்ல. இதுவே உண்மை ஞானம்.
* ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தால், வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.
* விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொழிலில் ஈடுபட்டேயாக வேண்டும் என்பது விதி.
*உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் வாழ்வு நேர்மையான வழியில் அமையும்.
- பாரதியார்